செய்திகள்
ஆதார் பூனவல்லா

இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மனு

Published On 2021-05-06 02:42 GMT   |   Update On 2021-05-06 07:55 GMT
அச்சுறுத்தல் காரணமாக சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிக்கு ஏற்கனவே மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது.
மும்பை:

கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டை விரைந்து தருமாறு மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள் மிரட்டல் விடுகின்றனர்.

தனக்கும், குடும்பத்தினருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இசட் பிளஸ் பாதுகாப்பு தேவை என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ள நிலையில் தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு அவர் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News