செய்திகள்
வேலூர், திருவண்ணாமலையில் பரவலாக மழை
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு மேகம் மந்தமாக காணப்பட்டது. இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது.
வேலூர்:
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு மேகம் மந்தமாக காணப்பட்டது. இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது.
இன்று அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் சில தனியார் பள்ளிகள் திறந்திருந்தன. இதனால் பள்ளிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர்.
மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை அணைக்கு 138 கனஅடி நீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 94 அடியாக உள்ளது.
இதேபோல் குப்பநத்தம், செண்பகத்தோப்பு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு மேகம் மந்தமாக காணப்பட்டது. இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது.
இன்று அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் சில தனியார் பள்ளிகள் திறந்திருந்தன. இதனால் பள்ளிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர்.
மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை அணைக்கு 138 கனஅடி நீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 94 அடியாக உள்ளது.
இதேபோல் குப்பநத்தம், செண்பகத்தோப்பு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.