செய்திகள்
கேரளாவில் 14,672, ஆந்திராவில் 8972: இன்றைய கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ்
கேரளாவில் தற்போது வரை 1.6 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆந்திராவில் 1.2 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 24 மணி பரிசோதனையில் 14.27 சதவீதமாகும். 21,429 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 227 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 24,62,071 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 9,946 பேர் உயிரழந்துள்ளனர். 1,60,653 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,976 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 13,568 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 90 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 16,23,447 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 11,466 பேர் உயிரிழந்துள்ளனர். 1,23,426 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.