செய்திகள்
கைது

கருமத்தம்பட்டி அருகே கத்தியை காட்டி மிரட்டி செல்போன் திருடிய 6 பேர் கைது

Published On 2021-06-27 09:26 GMT   |   Update On 2021-06-27 09:26 GMT
கருமத்தம்பட்டி அருகே கத்தியை காட்டி மிரட்டி செல்போன் திருடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருமத்தம்பட்டி:

பெங்களூருவைச் சேர்ந்த சுரேஷ் (22). இவர் கடந்த 22-ந் தேதி வடுகன் காளிபாளையத்தில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 7 வாலிபர்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி சுரேஷிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினர்,

இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்ததைத் தொடர்ந்து கருமத்தம்பட்டி போலீசார் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் வடுகன்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் (22), மாலிக் பாஷா (20), இம்ரான்கான் (22) என்பதும், மேலும் இவர்களது நண்பர்களான கோவையை சேர்ந்த சாகர் (19), விக்ரம்பிரபு (21) பிரேம்குமார் (22), ஆகியோர் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து 6 பேரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் தலைமறைவான மற்றொரு நபரான சக்திவேலை (23) போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News