செய்திகள்
மதுரை மாவட்டத்தில் புதிதாக 57 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரையில் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் நேற்று புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 40 பேர் நகர் பகுதியையும், 17 பேர் புறநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 570 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 58 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 550 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் கொரோனாவால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது மூதாட்டி மற்றும் 56 வயது பெண் ஆகியோர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர். இது வரை மதுரையில் கொரோனாவிற்காக 417 பேர் இறந்துள்ளனர்.