செய்திகள்
கைது

ராணிப்பேட்டையில் மணல் கடத்தியவர் கைது

Published On 2021-01-27 12:43 GMT   |   Update On 2021-01-27 12:43 GMT
ராணிப்பேட்டையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டிப்பர் லாரியில் மணல் கடத்திய வாலிபரை கைது செய்தனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):

கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் வசந்த் (வயது 19). இவர் நேற்று ராணிப்பேட்டை அருகே உள்ள பாலாற்றில் இருந்து டிப்பர் லாரியில் மணல் கடத்தினார். அப்போது அங்கு ரோந்துப்பணியில் இருந்த ராணிப்பேட்டை போலீசார் மணல் கடத்திய வசந்த்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News