உள்ளூர் செய்திகள்
விவசாயி வீட்டின் மேற்கூறையில் கிடந்த மற்றொரு துப்பாக்கி குண்டு தொடரும் சர்ச்சை
விவசாயி வீட்டின் மேற்கூறையில் கிடந்த மற்றொரு துப்பாக்கி குண்டால் பரபரப்பு
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் அருகே தமிழ்நாடு காவல் துறையினருக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் கடந்த திங்கட்கிழமை திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டார்கள். அப்போது அங்கிருந்து சென்ற துப்பாக்கி குண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (60) என்பவரது வீட்டின் மேற் கூரையில் விழுந்துள்ளது.
அப்போது வீட்டின் மேற்கூரையில் சிறுதுவாரம் ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் வீட்டின் மேற்கூரையில் இருந்த அந்த சிறு துவாரத்தை சரி செய்வதற்காக மேலே ஏறி பார்த்த போது அங்கு துப்பாக்கி குண்டு கிடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பாடாலூர் போலீஸ் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் இன்ஸ் பெக்டர் ஜெயராமன் தலை மையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்தத் துப்பாக்கிக் குண்டை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அதே வீட் டின் கூரையின் மேல் மற்றொரு துப்பாக்கி குண்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குண்டை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.