செய்திகள்
உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து ஈரோட்டில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து ஈரோட்டில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-23 13:47 GMT   |   Update On 2020-11-23 13:47 GMT
ஈரோட்டில் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:

தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் தேர்தல் பரப்புரைக்காக செல்ல முயன்ற உதயநிதி ஸ்டாலினை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனை கண்டித்து தி.மு.க.வினர் பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அதன்படி ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
Tags:    

Similar News