உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

சிவகிரி அருகே பால தடுப்பு சுவரில் கார் மோதி வாலிபர் பலி

Published On 2022-05-05 10:28 GMT   |   Update On 2022-05-05 10:28 GMT
சிவகிரி அருகே பாலதடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
சிவகிரி:

கேரள மாநிலம் கொல்லம்  மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீஜித் (வயது 32). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். 

இவர் தனது நண்பரான ராணுவ வீரர் ராகேஷ்  என்பவருடன் காரில் மதுரை சென்றார். பின்னர் அவர்கள் கேரளா திரும்பி சென்றனர். 

நேற்று மாலை மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலை சிவகிரி அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள பாலம் தடுப்பு சுவரில் மோதி வயல்காட்டில் கவிழ்ந்தது.

இதுகுறித்து  தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையில் போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த இருவரையும் மீட்டு  தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீ ஜித் இறந்தார். 

ராகேஷ் கேரளா மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News