ஆன்மிகம்
செப்பறை அழகிய கூத்தர்

செப்பறை அழகிய கூத்தர் கோவில் வருசாபிஷேக விழா

Published On 2021-01-20 04:14 GMT   |   Update On 2021-01-20 04:14 GMT
நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் நேற்று வருசாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் நேற்று வருசாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு விநாயகர் வழிபாடு, கும்ப ஸ்தாபனம், சிறப்பு ஹோமம் நடைபெற்றது. 10.30 மணிக்கு தாமிர சபைக்கும், சுவாமி-அம்பாள் விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. 11 மணிக்கு அழகிய கூத்தருக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் அழகிய கூத்தர் விழா மண்டபத்தில் இருந்து தாமிரசபைக்கு எழுந்தருளினார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News