ஆன்மிகம்
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

Published On 2021-11-03 07:02 GMT   |   Update On 2021-11-03 07:02 GMT
திருப்பதியில் உள்ள கோதண்டராம சாமி கோவில் மற்றும் கோவிந்தராஜ சாமி கோவிலில் தீபாவளி பண்டிகையையொட்டி நாளை (வியாழக்கிழமை) தீபாவளி ஆஸ்தானம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
திருப்பதியில் உள்ள கோதண்டராம சாமி கோவில் மற்றும் கோவிந்தராஜ சாமி கோவிலில் தீபாவளி பண்டிகையையொட்டி நாளை (வியாழக்கிழமை) தீபாவளி ஆஸ்தானம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவில் வளாகம், சுவர், கூரை, பூஜை பொருட்கள் போன்றவற்றை தண்ணீர் கொண்டு சுத்திகரித்து, நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம், கிச்சிலிக் கட்டா போன்ற சுகந்த திரவியங்கள் கலந்த புனிதநீர்கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

கோதண்டராம சாமி கோவிலில் காலை 7.30 மணி முதல் 10 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 11 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கோவிந்தராஜ சாமி கோவிலில் காலை 7 மணி முதல் 9 மணி வரை ஆழ்வார் திருமஞ்னம் நடைபெற்றது. காலை 9.30 மணிமுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு துணை நிர்வாக அதிகாரி பார்வதி, ராஜேந்திரா, உதவி நிர்வாக அதிகாரி ரவிக்குமார் ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News