செய்திகள்
தீக்குளிக்க முயற்சி

மதுரையில் கலெக்டர் ஆபீஸ் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

Published On 2019-11-04 09:49 GMT   |   Update On 2019-11-04 09:49 GMT
மதுரையில் கலெக்டர் ஆபீஸ் முன்பு பெண் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை:

உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூரைச் சேர்ந்த தங்கம் மனைவி லட்சுமி (வயது42) இன்று மதுரை கலெக்டர் ஆபீஸ் வந்தார். அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து லட்சுமி மீது தண்ணீரை ஊற்றினர். விசாரணையில் பெருமாள்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவர் ரூ.6 லட்சம் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டதாகவும் லட்சுமி தெரிவித்தார். 

மேலும் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தீக்குளிக்க முயன்றதாக அவர் கூறினார்.

Tags:    

Similar News