ஆன்மிகம்
மீனாட்சி அம்மன் கோவில்

மீனாட்சி அம்மன் கோவிலில் அனைத்து கோபுர வாசல்களிலும் பக்தர்களுக்கு அனுமதி

Published On 2021-02-16 08:48 GMT   |   Update On 2021-02-16 08:48 GMT
மீனாட்சி அம்மன் கோவிலில் அனைத்து கோபுர வாசல்கள் வழியாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சமீபத்தில் தான் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள அம்மன் சன்னதி வழியாக பொது தரிசனத்துக்கும், தெற்கு கோபுரம் வழியாக கட்டண தரிசனத்துக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் அர்ச்சனை போன்ற பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

நிபந்தனைகளை பின்பற்றி சுவாமி, அம்பாளை தரிசனம் மட்டும் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இது பக்தர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி வந்தது. பழைய நடைமுறையை போல, சுதந்திரமாக தரிசனம் செய்யவும், பூஜைகளை நடத்தவும், அர்ச்சனை செய்யவும் எப்போது அனுமதிப்பார்களோ என ஏங்கி வந்தனர்.

இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் வழக்கம் போல் அனைத்து கோபுரவாசல்கள் வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்றும், பூஜை பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 11-ந்தேதி தினத்தந்தியில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்கு பக்தர்களை கோவிலின் 4 கோபுர வாசல்கள் வழியாகவும் அனுமதிக்க அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 4 திசைகளிலும் உள்ள கோபுரங்களின் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பூஜை, அர்ச்சனை செய்வதற்கும் விரைவில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News