செய்திகள்
கோப்புபடம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 112 பேர் பாதிப்பு

Published On 2021-09-08 10:01 GMT   |   Update On 2021-09-08 10:01 GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 1230 பேர் உயிரிழந்துள்ளனர். 385 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 129 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 591 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2438 ஆக உயர்ந்துள்ளது. 1100 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆயிரத்து 93 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 71 ஆயிரத்து 478 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 1230 பேர் உயிரிழந்துள்ளனர். 385 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News