செய்திகள்
ஒட்டன்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி மாணவி பலி
ஒட்டன்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஐ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் மார்ட்டின் லூயிஸ் கிங். இவரது மகள் நிஷாந்தினி (வயது 14). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று அவர், தனது தோழிகளுடன் அருகில் உள்ள செங்குளத்திற்கு குளிக்க சென்றார். அவர்கள் குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது, நிஷாந்தினி மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.
அப்போது நீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.