செய்திகள்
அம்மாபேட்டை அருகே பாலிடெக்னிக் மாணவி கடத்தல்
அம்மாபேட்டை அருகே ஆசை வார்த்தை கூறி பாலிடெக்னிக் மாணவியை , வாலிபர் கடத்தப்பட்டது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் சரண்யா (வயது17). இவர் பவானி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இரவு இவர் பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார்.
இன்று அதிகாலை பெற்றோர் எழுந்து பார்த்தனர். அப்போது சரண்யாவை காணவில்லை. பல இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.
இதையடுத்து சரண்யாவின் தந்தை சுப்பிரமணியன் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகளை பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் சதீஷ்குமார் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டதாக கூறி உள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.