செய்திகள்
கைக்குழந்தையுடன் பெண்ணை கடத்திய தருமபுரி வாலிபர்- கணவர் போலீசில் புகார்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கைக்குழந்தையுடன் பெண்ணை கடத்திய தருமபுரி வாலிபர் மீது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே முலிக்கல் சவுளூர் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 33) கூலித்தொழிலாளி. இவருக்கு பவித்ரா (வயது 22) என்ற மனைவியும், லித்தி கிஷோர் (2½) என்ற கைக்குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந் தேதி பவித்ரா, தனது கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியில் சென்றவர் பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் 2 பேரும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அவர்கள் இருவரையும், தருமபுரியை சேர்ந்த வெங்கசேடன் (வயது 30) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என காவேரிப்பட்டணம் போலீசில் இளவரசன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.