செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மினி வேன் மற்றும் மதுபாட்டில்களை படத்தில் காணலாம்.

தேசூரில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

Published On 2021-04-05 17:41 GMT   |   Update On 2021-04-05 17:41 GMT
போலீசாரின் ரோந்து பணியில் மினி வேனில் கடத்தி வரப்பட்ட 191 மதுபாட்டில்கள், மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நசுருதீன் மற்றும் போலீசார் தேசூரில் மழையூர் சாலையில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மினி வேன் வந்தது. அதை நிறுத்தி போலீசார் சோதனைச் செய்தனர். அதில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

மதுபாட்டில்களை கடத்தி வந்த சாத்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (வயது 32), ஜஸ்டின் (39), திருமலை (41) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 191 மதுபாட்டில்கள், மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News