குழந்தை பராமரிப்பு
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

Published On 2022-03-28 02:34 GMT   |   Update On 2022-03-28 02:34 GMT
கருவுற்று இருக்கும் காலத்தில் பெண்களிடம் மன அழுத்தம் அதிகமாக இருந்தால், அது ஆட்டிச குறைபாடு கொண்ட குழந்தைகள் உருவாவதற்கு வித்திடும் என்று சொல்லப்படுகிறது.
குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடு ‘ஆட்டிசம்’ என்று அழைக்கப்படுகிறது. இதனை தமிழில் ‘மதி இறுக்கம்’ என்பார்கள். இது ஒரு நோய் கிடையாது. குறைபாடு மட்டுமே. சாதாரணக் குழந்தைகளுக்கு ஒரு முறை சொல்லிக்கொடுப்பதை, கூடுதலாக இரண்டு மூன்று முறை சொல்லிக்கொடுக்கும்போது, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளும் அதைக் கற்றுக்கொள்வார்கள்.

ஆஸ்திரியாவில் பிறந்த லியோ கன்னர் என்பவர்தான், முதன் முதலாக இந்த உலகத்திற்கு, ஆட்டிசம் என்பதை தெரியப்படுத்தியவர். இவர் 1943-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், ஆட்டிசம் பாதிப்பு கொண்ட குழந்தைகளின் பிரச்சினைகளைப் பற்றி கூறியிருந்தார்.

பெர்னார்ட் ரிம்லாண்ட், ரூத் சல்லிவன் ஆகிய இரண்டு மருத்துவர்கள், 1965-ம் ஆண்டு ஆட்டிசம் குறைபாடு பற்றிய ஆய்வு களுக்காக ‘ஆட்டிசம் சொசைட்டி’ என்ற அமைப்பை தொடங்கினார்கள். அதில் இருந்து நீண்ட நெடுங் காலத்திற்குப் பிறகுதான், அதாவது 2008-ம் ஆண்டில்தான் ஐ.நா சபையால், ஏப்ரல் 2-ந் தேதி ‘உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்’ என்று அறிவிக்கப்பட்டது.

கருவுற்று இருக்கும் காலத்தில் பெண்களிடம் மன அழுத்தம் அதிகமாக இருந்தால், அது ஆட்டிச குறைபாடு கொண்ட குழந்தைகள் உருவாவதற்கு வித்திடும் என்று சொல்லப்படுகிறது. அதே போல் தைராய்டு பிரச்சினை உள்ள பெண்கள், வலிப்பு நோய்க்கு மாத்திரை எடுத்துக் கொள்ளும் பெண்கள், போலிக் அமிலம் குறைவாக இருக்கும் பெண்களுக்கும், ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை நீண்டகால குழந்தைகள் என்று சொல்லலாம். அவர்களை வளர்த்தெடுக்கும் பொறுப்பு, இந்த சமூகத்திற்கு இருக்கிறது. அதைக் கருத்தில்கொண்டுதான், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ந் தேதியை, ‘உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தின’மாக கடைப்பிடித்து வருகிறோம்.

எஸ்.கண்ணபிரான், 11-ம் வகுப்பு,

அரசினர் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம்.
Tags:    

Similar News