செய்திகள்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 9 ஒன்றியங்களில் நாளை வாக்குப்பதிவு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர் ஆகிய ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6-ந்தேதி நடந்து முடிந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, வேலூர், கணியம்பாடி, அணைக்கட்டு ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட் சித் தேர்தல், நாளை நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது. ஓட்டுப் பதிவுக்கான ஆயத்த பணிகளில் ஊரக உள்ளாட்சித் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 2 வது கட்ட தேர்தலுக்கு மொத்தம் 469 ஓட்டுச்சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதில் 5 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 23 பேர், 50 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 152 பேர், 87 பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 273 பேர், 697 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஆயிரத்து 812 பேர் போட்டியிடுகின்றனர்.
இதுதவிர, பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 6 பேர், வார்டு உறுப்பினர் பதவிக்கு 80 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர், ஆலங்காயம் ஆகிய ஒன்றியங்களில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. 4 மாவட்ட கவுன்சிலர், 70 ஒன்றிய கவுன்சிலர், 70 பஞ்சாயத்து தலைவர், 514 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது.
இதில் 2 ஆயிரத்து 167 பேர் போட்டியிடுகின்றனர். 385 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. 1250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர் ஆகிய ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
மொத்தம் 757 வாக்கு சாவடி மையங்களில் 6 ஆயிரத்து 203 வாக்குசாவடி அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர். 172 பதற்றமான வாக்குசாவடி ஆகும்.1,940 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
7 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 40பேரும், 71 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 310 பேரும்.143 ஊராட்சிமன்ற தலைவர் பதவிகளுக்கு 504பேரும், 939 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2,523 பேரும் என மொத்தம்1,160 பதவிக்கு 3,377 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 3லட்சத்து 68 ஆயிரத்து 378 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6-ந்தேதி நடந்து முடிந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, வேலூர், கணியம்பாடி, அணைக்கட்டு ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட் சித் தேர்தல், நாளை நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது. ஓட்டுப் பதிவுக்கான ஆயத்த பணிகளில் ஊரக உள்ளாட்சித் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 2 வது கட்ட தேர்தலுக்கு மொத்தம் 469 ஓட்டுச்சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதில் 5 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 23 பேர், 50 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 152 பேர், 87 பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 273 பேர், 697 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஆயிரத்து 812 பேர் போட்டியிடுகின்றனர்.
இதுதவிர, பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 6 பேர், வார்டு உறுப்பினர் பதவிக்கு 80 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர், ஆலங்காயம் ஆகிய ஒன்றியங்களில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. 4 மாவட்ட கவுன்சிலர், 70 ஒன்றிய கவுன்சிலர், 70 பஞ்சாயத்து தலைவர், 514 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது.
இதில் 2 ஆயிரத்து 167 பேர் போட்டியிடுகின்றனர். 385 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. 1250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர் ஆகிய ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
மொத்தம் 757 வாக்கு சாவடி மையங்களில் 6 ஆயிரத்து 203 வாக்குசாவடி அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர். 172 பதற்றமான வாக்குசாவடி ஆகும்.1,940 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
7 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 40பேரும், 71 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 310 பேரும்.143 ஊராட்சிமன்ற தலைவர் பதவிகளுக்கு 504பேரும், 939 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2,523 பேரும் என மொத்தம்1,160 பதவிக்கு 3,377 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 3லட்சத்து 68 ஆயிரத்து 378 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.