செய்திகள்

பிளஸ்-2 தேர்வில் தோல்வி - மாணவி தற்கொலை

Published On 2019-06-12 10:47 GMT   |   Update On 2019-06-12 10:47 GMT
வடபழனி அருகே பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:

வடபழனி பக்தவச்சலம் காலனி 1-வது தெருவைச் சேர்ந்தவர் ஜீவஜோதி (வயது 17). கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். மேலும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்து இருந்தார். உடன் படித்த பள்ளி தோழிகள் அனைவரும் தேர்ச்சி அடைந்து கல்லூரிக்கு சென்று விட்டதால் விரக்தி அடைந்த ஜீவஜோதி கடந்த சில நாட்களாக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் ஜீவஜோதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News