செய்திகள்
கோப்புபடம்

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க உபகரணங்கள் தயார்

Published On 2021-07-22 10:09 GMT   |   Update On 2021-07-22 10:09 GMT
பயனாளிகளுக்கு வழங்கும் வகையில் வாக்கர் மற்றும் மூன்று சக்கர சைக்கிள் ஆகியன வந்துள்ளன.
திருப்பூர்:

திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம் உள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல், நலத்திட்ட உதவி வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது பயனாளிகளுக்கு வழங்கும் வகையில் வாக்கர் மற்றும் மூன்று சக்கர சைக்கிள் ஆகியன வந்துள்ளன.

இவற்றை வழங்க அலுவலக ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தகுதியுடைய பயனாளிகள் இதனை பெற விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே இதற்காக விண்ணப்பித்தோருக்கும் பதிவு மற்றும் தகுதி அடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News