செய்திகள்
பிரிஜ்மோகன் அகர்வால்

கர்நாடகா, ம.பி., ராஜஸ்தானை அடுத்து சத்தீஸ்கர்: முன்னாள் மாநில மந்திரி சூசகம்

Published On 2020-07-15 20:52 GMT   |   Update On 2020-07-15 20:52 GMT
ராய்ப்பூரில் இருந்து டெல்லி வரை காங்கிரஸ் சலசலக்கிறது, அங்கு தலைமை இல்லை என்று சத்தீஸ்கர் முன்னாள் மந்திரி தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் முடிவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இருந்தாலும் பா.ஜனதாவுக்கும் காங்கிரஸ்-க்கும் இடையில் மிகக்குறைவான இடங்களே வித்தியாசம். இதனால் பா.ஜனதா எப்போது வேண்டுமென்றாலும் ஆட்சியை கவிழ்க்கலாம் என்ற அச்சத்துடன்தான் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது.

கர்நாடகாவில் குமாரசாமி கட்சியுடன் இணைந்து ஆட்சி நடத்தியது. காங்கிரஸ் கட்சியின் சிலர் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தனர். இதனால் ஆட்சி கவிழ்ந்தது. மத்திய பிரதேசத்தில் ஜோதிராத்திய சிந்தியா 20-க்கும் மேற்பட்ட எம்.எம்.ஏ.க்களுடன் விலகி பா.ஜனதாவில் இணைந்ததால் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி கவிழ்ந்தது.

ராஜஸ்தானில் சச்சின் பைலட்டுக்கும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் பைலட் பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியை கவிழ்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பைலட் பா.ஜனதாவில் சேரமாட்டேன் என்று தெரிவித்துவிட்டார். இதனால் அசோக் கெலாட் ஆட்சிக்கு தற்போது ஆபத்து இல்லை.

இந்நிலையில் சத்தீஸ்கரிலும் அதே நிலை ஏற்படலாம் என்று பா.ஜனதா அம்மாநில முன்னாள் மந்திரி பிரிஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரிஜ்மோகன் கூறுகையில் ‘‘ராய்ப்பூரில் இருந்து டெல்லி வரை காங்கிரஸ் கட்சி சலசலக்கிறது. அங்கு எந்தவொரு தலைமையும் இல்லை. அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆக, அவர்கள் தவறான முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதன்காரணமாக அதிருப்தி ஏற்படுகிறது. அதிருப்தியால்தான் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் அதுபோன்ற முடிவு ஏற்பட்டது.

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் நடைபெற்றது போன்று சத்தீஸ்கரிலும் நடைபெறுமோ என்று அவர்கள் தற்போது பயப்படுகிறார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News