செய்திகள்
பாம்பு

வேதாரண்யம் அருகே பாம்பு கடித்து 2 வயது சிறுவன் பலி

Published On 2019-12-09 10:12 GMT   |   Update On 2019-12-09 10:12 GMT
வேதாரண்யம் அருகே வீட்டுவாசலில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவனை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தான்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தி பெரியகுத்தகை பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி விவசாயி. இவரது மகன் குருதர்‌ஷன் (வயது2). நேற்று முன்தினம் மாலை தனது வீட்டுவாசலில் குருதர்‌ஷன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளான்.

இதையடுத்து கலிய மூர்த்தி உடனடியாக கரியாப் பட்டினம் அரசு மருத்துவமனைக்கு தனது மகனை கொண்டு சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வி‌ஷபூச்சி கடித்துள்ளதாக கூறி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி குருதர்‌ஷன் பரிதாபமாக இறந்தான். இது குறித்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் குருதர்‌ஷனை வி‌ஷபாம்பு கடித்துள்ளதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News