ஆன்மிகம்
பெருமாள்

திருமண தடை நீங்கும் மார்கழி மாத விரதம்

Published On 2020-12-16 01:25 GMT   |   Update On 2020-12-16 01:25 GMT
மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளி யெழுச்சி பாடல்களை பாடினால் திருமண தடை நீங்கும்.
பனி விழும் மாதம் மார்கழி. இந்த மாதத்தில் அனைவரும் அதிகாலையில் எழுந்து ஆறு, குளத்திற்கு சென்று நீராடிவிட்டு பகவானின் நாமத்தை கூறியபடியும், திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளி யெழுச்சி பாடல்களை பாடியபடியும் வீதிகள்தோறும் நடந்து செல்வார்கள்.

கோவிலுக்கு சென்றும் வழிபடுவர். வீட்டில் இருப்பவர்கள் குளித்துவிட்டு வீட்டின் வாசலை தெளித்து பெருக்கி, பெரிய கோலங்கள் போடுவர். மார்கழி மாதத்தில் அதிகாலைநேரத்தில் ஒசோன் வாயு கீழே வெளிப்படுகிறது.

அது வியாதிகளை கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. ஓசோன் நம்மீது பட்டு உடல் ஆரோக்கியம் பெறுகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இதனால் தான் மார்கழி மாதத்தில் பொழுது விடியும் நேரத்தில் நீராடி நோன்பு நோற்கும் முறை உருவானது.

திருமணம் தடைபடுபவர்கள் மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.
Tags:    

Similar News