ஆற்றூர் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதல்- மீன் வியாபாரி பலி
திருவட்டார்:
மார்த்தாண்டம் அருகே ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் பெனிஸ் (வயது 24) இவர் மார்த்தாண்டம் சந்தையில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவர் ஆற்றூர் பகுதியை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் செய்தார்.
பெனிஸ் நேற்று இரவு மார்த்தாண்டத்தில் இருந்து ஆற்றூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வரும் போது கல்லுபாலம் அருகில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் கீழே விழுந்ததில் பெனிசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது எதிரே வந்தவருக்கு லோசன காயம் ஏற்பட்டது.
உடனே அந்த பகுதியில் உள்ளவர்கள் பெனிசை ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது பெனிஸ் இறந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி ஒரு வருடத்தில் மீன் வியாபாரி விபத்தில் இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.