செய்திகள்
கொலை செய்யப்பட்ட பிரியங்கா மற்றும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்

ஐதராபாத் பெண் டாக்டரை கற்பழித்து கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு நீதிமன்ற காவல்

Published On 2019-11-30 11:56 GMT   |   Update On 2019-11-30 11:56 GMT
ஐதராபாத்தில் பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டியை கடத்தி கற்பழித்து கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தவர் பிரியங்கா ரெட்டி(27). 

இதற்கிடையில், பிரியங்கா கடந்த 27-ம் தேதி தனது பைக் பஞ்சர் ஆனதால் ரெட்டி மாவட்டத்தின் சாத்நகர் பகுதியில் சுங்கச்சாவடி அருகே பைக்கை நிறுத்தி உள்ளார். 

அப்போது அவருக்கு உதவி செய்வதாக கூறி ஒரு லாரி டிரைவர் உள்பட 4 பேர் பிரியங்காவை கடத்திச்சென்று கற்பழித்து கொடூரமாக எரித்துக்கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நாடு முழுவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் குற்றச்சாட்டப்பட்டவர்கள் 4 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார். 

இதையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சந்சல்குடா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். 
Tags:    

Similar News