உள்ளூர் செய்திகள்
உடல்நலக் குறைவால் இறந்த சேலம் ஏட்டு குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதி திரட்டி வழங்கிய போலீசார்
உடல்நலக் குறைவால் இறந்த சேலம் ஏட்டு குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதி திரட்டி வழங்கப்பட்டது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் பழையூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரவேல் (வயது 49). இவர் 1997 ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்து பின்னர் தலைமை காவலராக சென்னையில் பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு சுமதி (45) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் சங்கரவேல் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து 1997 ம் ஆண்டு பணியில் சேர்ந்த 2390 ஆண், பெண் காவலர்கள் இணைந்து இறந்து போன சிங்காரவேல் குடும்பத்திற்கு 12 லட்சத்து 15 ஆயிரத்து 7 ரூபாய் மற்றும் அதே ஆண்டு பழனி காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற காவலர்கள் மூலம் ரூபாய் 3 லட்சம் ஆக மொத்தம் ரூபாய் 15 லட்சத்து 15 ஆயிரத்து 7இறந்துபோன காவலர் சிங்காரவேலன் மனைவி சுமதியிடம் வழங்கினார்கள்.
சேலம் சூரமங்கலம் பழையூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரவேல் (வயது 49). இவர் 1997 ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்து பின்னர் தலைமை காவலராக சென்னையில் பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு சுமதி (45) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் சங்கரவேல் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து 1997 ம் ஆண்டு பணியில் சேர்ந்த 2390 ஆண், பெண் காவலர்கள் இணைந்து இறந்து போன சிங்காரவேல் குடும்பத்திற்கு 12 லட்சத்து 15 ஆயிரத்து 7 ரூபாய் மற்றும் அதே ஆண்டு பழனி காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற காவலர்கள் மூலம் ரூபாய் 3 லட்சம் ஆக மொத்தம் ரூபாய் 15 லட்சத்து 15 ஆயிரத்து 7இறந்துபோன காவலர் சிங்காரவேலன் மனைவி சுமதியிடம் வழங்கினார்கள்.