செய்திகள்
ராகுலிடம் நாராயணசாமி பொய் சொன்னார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு
மீனவ பெண் கூறிய புகாரை தவறாக மொழி பெயர்த்து ராகுல் காந்தியை ஏமாற்றியவர் நாராயணசாமி என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் விழுப்புரம்-நாகை 4 வழிச்சாலை உள்ளிட்ட புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
* மீனவ பெண் கூறிய புகாரை தவறாக மொழி பெயர்த்து ராகுல் காந்தியை ஏமாற்றியவர் நாராயணசாமி.
* நாட்டுக்கு உண்மையை சொல்வதற்கு பதில் நாராயணசாமி பொய் உரைத்தார்.
* புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பஞ்சாயத்து தேர்தலை நடத்தவில்லை.
* குஜராத், காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் புதுச்சேரியில் நடக்கவில்லை.
* புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை. மத்திய நிதியை பயன்படுத்தவில்லை.
* மோசமான காங்கிரஸ் அரசு நிர்வாகத்திடமிருந்து புதுச்சேரி மக்கள் விடுதலை பெற்றுள்ளனர்.
* புதிய வளர்ச்சி பணிகள் புதுச்சேரி மக்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை தரும்.
* புதுச்சேரியில் மக்கள் சக்தியால் இயங்கும் அரசு வரும் சட்டசபை தேர்தலில் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் விழுப்புரம்-நாகை 4 வழிச்சாலை உள்ளிட்ட புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
* மீனவ பெண் கூறிய புகாரை தவறாக மொழி பெயர்த்து ராகுல் காந்தியை ஏமாற்றியவர் நாராயணசாமி.
* நாட்டுக்கு உண்மையை சொல்வதற்கு பதில் நாராயணசாமி பொய் உரைத்தார்.
* புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பஞ்சாயத்து தேர்தலை நடத்தவில்லை.
* குஜராத், காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் புதுச்சேரியில் நடக்கவில்லை.
* புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை. மத்திய நிதியை பயன்படுத்தவில்லை.
* மோசமான காங்கிரஸ் அரசு நிர்வாகத்திடமிருந்து புதுச்சேரி மக்கள் விடுதலை பெற்றுள்ளனர்.
* புதிய வளர்ச்சி பணிகள் புதுச்சேரி மக்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை தரும்.
* புதுச்சேரியில் மக்கள் சக்தியால் இயங்கும் அரசு வரும் சட்டசபை தேர்தலில் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.