செய்திகள்
புதிய காற்றழுத்த காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று போச்சம்பள்ளி பகுதியில் மிதமான மழை பெய்தது.
போச்சம்பள்ளி:
புதிய காற்றழுத்த காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் போச்சம்பள்ளி, அரசம்பட்டி, அகரம் பாரூர், உள்ளிட்ட பல பகுதிளில் மிதமான மழை பெய்தது.
சில இடங்களில் சாரல் மழை பெய்தது. தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்தப்படியே நடந்து சென்றனர்.
இதேபோன்று கிருஷ்ணகிரி நகர பகுதியிலும் காலை முதல் சாரல் மழை பெய்தது.