செய்திகள்
சிவகாசி அருகே தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
சிவகாசி அருகே தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி சாட்சியாபுரம் ஆசாரி காலனியை சேர்ந்தவர் சொர்ணம் (வயது 81). இவரது கணவர் காளியப்பன். கடந்த 19 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இந்த நிலையில் மூதாட்டி சொர்ணம் தனியாக வசித்து வந்தார். இவரது மகன் ஆறுமுகச்சாமி (52) அதேபகுதியில் வேறு வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சொர்ணத்துக்கு பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தார். இந்தநிலையில் நோய் குணமாகாததால் மனமுடைந்த அவர் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பாலத்த தீக் காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் ஆறுமுகச்சாமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.