செய்திகள்
தற்கொலை

சீர்காழி அருகே தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை

Published On 2021-09-24 12:23 GMT   |   Update On 2021-09-24 12:23 GMT
சீர்காழி அருகே தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமம் காட்டுதெரு சுனாமி நகரை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் சண்முகம் (வயது 35). கொத்தனார். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றும் 2 பேருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கணவர் சண்முகத்திடம் கோபித்து கொண்டு செல்வி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். இதை தொடர்ந்து சண்முகம் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News