செய்திகள்
கைது

மறைமலைநகர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

Published On 2021-11-23 11:16 GMT   |   Update On 2021-11-23 11:16 GMT
மறைமலைநகர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் உள்ள ரெயில் நகர் பகுதியில் உள்ள மறைவான இடத்தில் ஒரு சில நபர்கள் கஞ்சா வைத்திருப்பதாக மறைமலை நகர் போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மறைமலைநகர் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு மறைமலைநகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 29), என்பவர் கையில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரஞ்சித்தை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News