ஆன்மிகம்
குபேரர் கிரிவலம்: அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நெருங்கி வருகிறது. இதனையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நெருங்கி வருகிறது. இதனையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று குபேரர் கிரிவலமும் நடந்தது. இதன் காரணமாகவும், விடுமுறை நாள் என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே குவிந்தவண்ணம் இருந்தது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டண தரிசன வழியிலும், பொதுதரிசன வழியிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டண தரிசன வழியிலும், பொதுதரிசன வழியிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.