உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

ஆற்றில் குளிக்க சென்ற ஆசிரியர் பிணமாக மீட்பு

Published On 2022-01-28 05:24 GMT   |   Update On 2022-01-28 05:24 GMT
ஆற்றில் குளிக்க சென்ற ஆசிரியர் பிணமாக மீட்கப்பட்டார்.
திருச்சி:

முசிறி மறைபரப்பு பெரியார் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சரவணன் (வயது29).  இவர் நாமக்கல்லில் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.  சம்பவத்தன்று இவர், அண்ணன் உதயகுமாருடன் முசிறி காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, உதயகுமார் முன்னதாக  குளித்து விட்டு, சரவணணை  பார்த்து நான் வீட்டுக்கு செல்கிறேன். நீ  சீக்கிரம் குளித்துவிட்டு வா என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.

இந்நிலையில் நேரம் ஆகியும் சரவணன் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உதயகுமார், உடனடியாக ஆற்றுக்கு வந்து சரவணன் குளித்த இடத்தில் பார்த்த போது,  அங்கு துவைத்து வைத்திருந்த துணி மட்டும்தான் இருந்தது. சரவணனை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த உதயகுமார், முசிறி தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கும் தகவல்  தெரிவித்தார்.  தகவலின் பேரில்  விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் சேர்ந்து காவிரியாற்றில் ஆசிரியர் சரவணனை  2 நாட்களாக தேடினர்.  இந்நிலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் சுடுகாட்டின் அருகே சரவணனின் உடல் ஆற்றின் கரை ஒதுங்கி இருந்ததை பார்த்தனர்.

உடனடியாக முசிறி போலீசார் சரவணின்உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News