செய்திகள்
விபத்து

நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Published On 2021-01-15 13:58 GMT   |   Update On 2021-01-15 13:58 GMT
நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நாங்குநேரி அருகே உள்ள ஸ்ரீரங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 60). இவரது மனைவி பேச்சியம்மாள். சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் நாங்குநேரி மெயின்ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மாடசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாடசாமியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனளிக்காமல் முதியவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News