செய்திகள்
கோபி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
கோபி அடுத்த பெரிய மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் கூலி தொழிலாளி. இவரது மகள் சத்யபாமா (வயது 20).
சத்யபாமா கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த சில மாதமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது மாணவி சத்தியபாமா தனது சுடிதார் துணி மூலம் தூக்குப்போட்டு தொங்கினார்.
சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த உறவினர்கள் கதவை உடைத்து மாணவியை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டரா? அல்லது வேறு காரணம் ஏதும் உண்டா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவி திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோபி அடுத்த பெரிய மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் கூலி தொழிலாளி. இவரது மகள் சத்யபாமா (வயது 20).
சத்யபாமா கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த சில மாதமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது மாணவி சத்தியபாமா தனது சுடிதார் துணி மூலம் தூக்குப்போட்டு தொங்கினார்.
சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த உறவினர்கள் கதவை உடைத்து மாணவியை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டரா? அல்லது வேறு காரணம் ஏதும் உண்டா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவி திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.