செய்திகள்
கொரோனா வைரஸ்

தஞ்சையில் கொரோனாவுக்கு முதியவர் பலி

Published On 2021-11-27 10:29 GMT   |   Update On 2021-11-27 10:29 GMT
தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 247 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 34 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 23 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 76 வயது முதியவர் பலியானார். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 992 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 247 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News