செய்திகள்
பிரதமர் மோடி

கொரோனா பாதிப்பு உச்சகட்டம்... பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

Published On 2021-04-19 07:50 GMT   |   Update On 2021-04-19 07:50 GMT
தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்துவது, கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை பிரதமர் வழங்கினார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி பாதிப்பு 2.73 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக நாடு முழுவதிலும் கொரோனா நிலவரம் மற்றும் தடுப்பூசி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையின்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்துவது, கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை பிரதமர் வழங்கினார்.



நேற்று தனது சொந்த தொகுதியான வாரணாசியில் கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது அவசியம் என வலியுறுத்தினார்.
Tags:    

Similar News