செய்திகள்
கைது

கபிஸ்தலம் அருகே சொத்து தகராறில் தாயை அடித்து உதைத்த மகன் கைது

Published On 2021-08-11 10:39 GMT   |   Update On 2021-08-11 10:39 GMT
கபிஸ்தலம் அருகே சொத்து தகராறில் தாயை அடித்து உதைத்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே உள்ள வாழ்க்கை காலனி தெருவில் வசிப்பவர் கிட்டப்பா மனைவி புஷ்பம் (வயது 60) விவசாயி. இவரது மகன் இளையராஜா (34). சம்பவத்தன்று தன் தாய் புஷ்பம் வீட்டிற்கு வந்த இளையராஜா சொத்து கேட்டு மிரட்டியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இளையராஜா ஆத்திரமடைந்து புஷ்பத்தை அடித்து உதைத்து தாக்கினார். மேலும் வீட்டு முன்பு இருந்த கேட் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி சென்றார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த புஷ்பத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து புஷ்பம் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் தலைமை காவலர் கார்த்திகேயன் வழக்கு பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News