செய்திகள்
ஊத்தங்கரை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
ஊத்தங்கரை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை போலீசார் சென்னப்பநாயக்கனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த காமராஜ் (வயது 50), பரமசிவன்(40), வேடியப்பன்(33) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.