உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லையில் மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை

Published On 2022-01-29 09:23 GMT   |   Update On 2022-01-29 09:23 GMT
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள மூவிருந்தாளி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர், தனது மனைவி இறந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள மூவிருந்தாளி கிராமத்தை சேர்ந்தவர் பெரிய பாண்டியன் (வயது 38). விவசாய தொழிலாளி.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார். அதுமுதல் இவர் யாரிடமும் பேசாமல் மது குடிக்கும் பழக்கத்தில் ஈடுபட்டார்.

அவ்வப்போது தனது உறவினர்களிடம், ‘மனைவி இறந்துவிட்டதால் வாழ பிடிக்கவில்லை, நான் தற்கொலை செய்யப் போகிறேன்” என்று கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 23-&ந்தேதி பெரியபாண்டியன் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News