பெண்கள் மருத்துவம்
தாய்ப்பால்

தாய்ப்பால் புகட்டும் பெண்களின் கவனத்திற்கு...

Published On 2021-12-30 03:37 GMT   |   Update On 2021-12-30 03:37 GMT
தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள் தண்ணீர், பழச்சாறு, மோர், பால் போன்வற்றை அடிக்கடி பருக வேண்டும். ஒவ்வொரு முறை குழந்தைக்கு பால் புகட்டுவதற்கு முன்னரும் தண்ணீர் அருந்த வேண்டும்.
குழந்தை அழும்போதெல்லாம் தாய்ப்பால் புகட்ட வேண்டும். குழந்தை பிறந்த முதல் 6 மாதங்கள் வரை பகலில் குறைந்தபட்சம் 6 முதல் 7 முறையும், இரவில் 3 முதல் 4 முறையும் தாய்ப்பால் புகட்டுவது அவசியமானதாகும். தாய்ப்பால் புகட்டுவதற்கு முன்னரும், புகட்டிய பின்னரும் மார்பகங்களை சுத்தப்படுத்த வேண்டும்.

வேலைக்கு செல்லும் தாய்மார்கள் பிரெஸ்ட் பம்ப் மூலம் தாய்ப்பாலை சேகரித்து குளிர்பதனப்பெட்டியில் வைத்து பாதுகாக்கலாம். பாலை வெளியே எடுத்து அரை மணி நேரம் கழித்து மீண்டும் அறை வெப்பநிலைக்கு கொண்டு வந்த பிறகே குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள் தண்ணீர், பழச்சாறு, மோர், பால் போன்வற்றை அடிக்கடி பருக வேண்டும். ஒவ்வொரு முறை குழந்தைக்கு பால் புகட்டுவதற்கு முன்னரும் தண்ணீர் அருந்த வேண்டும்.

அதிக புரதச்சத்து மிதமான மாவுச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். கீரைகள், பேரீச்சை, அவல், கருப்பட்டி, நெல்லிக்காய் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளையும் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

தினமும் 7 முதல் 8 மணி நேரம் உறக்கம் அவசியமானது. எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் புகட்டுவதால் ஹார்மோன் சுரப்பு சீராகும். இதன் காரணமாக தாயின் கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலையை அடையும். பிரசவத்தினால் ஏற்பட்ட உதிரப்போக்கு நிற்கும்.

கர்ப்ப காலத்தில் தாய்க்கு அதிகரித்த உடல் எடை குறையும். மார்பகப்புற்றுநோய் ஏற்படாது.
Tags:    

Similar News