செய்திகள்
சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் திருவுருவபடத்துக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்திய காட்சி.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா: அமைச்சர்கள் மரியாதை

Published On 2020-09-27 05:26 GMT   |   Update On 2020-09-27 05:26 GMT
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி, அவரது திருவுருவபடத்துக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
சென்னை:

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை எழும்பூரில் சி.பா.ஆதித்தனார் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன், பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

மேலும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மாலை முரசு நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
Tags:    

Similar News