கடலூரில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து போராட்டம்
கடலூர்:
மக்கள் அதிகாரம் சார்பில் மத்திய அரசு அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடவேண்டும். செங்கல்பட்டு தடுப்பு ஊசி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
நிவாரணமாக குடும்பத்திற்கு 10 ஆயிரம் வழங்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் நந்தா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரவி, ஆனந்தி, முத்து, நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலு கண்டன உரையாற்றினார். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஷேக் தாவூத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழ் அன்சாரி, ஜாகிர் உசேன், பொருளாளர் அசன் முகமது, துணைத் தலைவர் மதர்ஷா, துணை செயலாளர்கள் சம்சுதீன், ஷாகுல் ஹமீது, காதர் ஷரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் அப்துல் ரஹீம் வரவேற்றார்.
இதன் பின்னர் பெட்ரோல் டீசல் விலை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.