ஆட்டோமொபைல்
பஜாஜ் செட்டாக்

இந்தியாவில் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு திட்டத்தில் மாற்றம்

Published On 2020-05-29 10:34 GMT   |   Update On 2020-05-29 10:34 GMT
பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய வெளியீடு திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.



பஜாஜ் நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை இந்திய சந்தையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கியது. எனினும், முதற்கட்டமாக இதன் விற்பனை பூனே மற்றும் பெங்களூரு என இரு நகரங்களில் மட்டுமே துவங்கப்பட்டது. மற்ற நகரங்களில் இதன் விற்பனை படிப்படியாக துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் டெல்லி மற்றும் சென்னை என மற்ற நகரங்களில் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை தாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.



மற்ற நிறுவனங்களை போன்று பஜாஜ் நிறுவனமும் தனது பணிகளை முழுமையாக நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பஜாஜ் ஆட்டோ தனது பணிகளை சமீபத்தில் துவங்கியது. இதனால் இதன் வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

நாடுமுழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் முன் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பூனே மற்றும் பெங்களூரு நகரங்களில் விநியோகம் செய்யப்பட்டன.

இந்தியாவில் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News