ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தி கோவில் சார்பாக மங்கள பொருட்கள் சமர்ப்பணம்
ஸ்ரீகாளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பாக சொர்ணமுகி ஆற்றுக்கு மங்கல பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
சித்தூர் மாவட்டம் முழுவதும் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீகாளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பாக சொர்ணமுகி ஆற்றுக்கு மங்கல பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் கோவில் அதிகாரிகள், வேதப் பண்டிதர்கள் பங்கேற்று கோவிலில் சிறப்புப்பூஜைகள் செய்து, மஞ்சள், குங்குமம், பட்டு வஸ்திரம் மற்றும் பூஜை பொருட்களை கோவிலில் இருந்து தலையில் சுமந்த படி ஊர்வலமாக சொர்ணமுகி ஆற்றுக்கு சென்று, ஓடும் தண்ணீரில் மங்கள பொருட்களை தூவி சமர்ப்பித்தனர். அதில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டியின் குடும்பத்தினர், பக்தா்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் கோவில் அதிகாரிகள், வேதப் பண்டிதர்கள் பங்கேற்று கோவிலில் சிறப்புப்பூஜைகள் செய்து, மஞ்சள், குங்குமம், பட்டு வஸ்திரம் மற்றும் பூஜை பொருட்களை கோவிலில் இருந்து தலையில் சுமந்த படி ஊர்வலமாக சொர்ணமுகி ஆற்றுக்கு சென்று, ஓடும் தண்ணீரில் மங்கள பொருட்களை தூவி சமர்ப்பித்தனர். அதில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டியின் குடும்பத்தினர், பக்தா்கள் பங்கேற்றனர்.