ஆன்மிகம்
மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் நந்தனார் குருபூஜை

மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் நந்தனார் குருபூஜை

Published On 2020-10-09 06:14 GMT   |   Update On 2020-10-09 06:14 GMT
மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் நந்தனார் குருபூஜை புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் நடைபெற்றது. விழாவில் நந்தனாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
மயிலாடுதுறை ஆன்மிக பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் நந்தனார் குருபூஜை புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் நடைபெற்றது.

விழாவில் நந்தனாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் மயூரநாதர் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிக பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராம.சேயோன் செய்திருந்தார்.

Tags:    

Similar News