லைஃப்ஸ்டைல்
குடைமிளகாய் பன்னீர் தோசை

குடைமிளகாய் பன்னீர் தோசை

Published On 2020-02-15 08:35 GMT   |   Update On 2020-02-15 08:35 GMT
குடைமிளகாய், பன்னீர் சேர்த்து தோசை செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தோசை மாவு - 2 கப்
மஞ்சள் குடைமிளகாய் - 2
பச்சை குடைமிளகாய் - 2
சிவப்பு குடைமிளகாய் - 2
பச்சைப் பட்டாணி - 1 கப்
துருவிய பன்னீர் - கால் கப்
பெ.வெங்காயம் - 4
கொத்தமல்லி - சிறிதளவு தழை
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:

குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, வேக வைத்த பட்டாணி சேர்த்து கலந்து வைக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி தோசை மாவை சற்று கனமாக ஊற்றவும்.

அதன் மீது குடைமிளகாய் வகைகள், வெங்காயம், கொத்தமல்லி தழை, பன்னீர் துருவர் ஆகியவற்றை பரவலாக தூவவும். தோசையை சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி மூடிவைக்கவும். ஒரு பக்கம் நன்றாக வெந்தாலே போதுமானது. அதை அப்படியே எடுத்து பரிமாறலாம்.

சூப்பரான குடைமிளகாய் பன்னீர் தோசை ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News