ஆன்மிகம்
ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி 3 சுற்றுகள் பவனி

வருடாந்திர தெப்போற்சவம் 3-வது நாள்: ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி 3 சுற்றுகள் பவனி

Published On 2021-03-27 03:43 GMT   |   Update On 2021-03-27 03:43 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவ விழாவின் 3-வது நாளில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து, தெப்பத்தில் எழுந்தருளினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து, தெப்பத்தில் எழுந்தருளினர்.

ெதப்பத்தில் எழுந்தருளிய உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவில் பெரிய ஜீயர்சுவாமிகள், கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் டி.பி.ஆனந்தா, சிப்பகிரி வரபிரசாத், தேவஸ்தான என்ஜினீயர் ரமேஷ் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News